Monday, July 14, 2008

பின்னூட்டத்திற்கு ஒரு முன்னோட்டம்

இந்த போஸ்ட்டுக்கு என்னால் தமிழில் தலைப்பு கொடுக்க இயலவில்லை. எப்படி அடித்தாலும் தமிழும் ஆங்கிலமும் கலந்தோ அல்லது தமிழிலேயே தப்பு தப்பு ஆகவும் வருகிறது. எப்படி இருந்தாலும் தலைப்பு இல்லாமல் இருக்கக்கூடாது என்பதால் இந்த இடத்தில் அடித்து நகல் ஒட்டி இருக்கிறேன்.
தமிழில் ப்ளாக் செய்யவேண்டும் என்ற ஆவல் இப்போதுதான்.நிறைவேறுகிறது.சிலவிஷயங்களை தமிழில் எழுதுவதுதான் சரியாக இருக்கும் என்று எண்ணி தள்ளிப்போட்டு வந்தேன்.
இந்த posting பின்னூட்டம் இடுவதைப்பற்றியது. என்னுடைய கருத்து பின்னூட்டம் இடுவதின் நோக்கம் ஒரு posting பற்றிய நம்முடைய reaction என்ன என்று வலைஞருக்கு தெரிவிப்பது.அதில் உள்ள பாராட்டத்தக்க அம்சங்களை பாராட்டுவதும் அதை மேம்படுத்துவதற்கான யோசனைகளை வழங்குவதுமாகும்.வலைஞர் சொல்லும் கருத்துக்கு நேர் மாறான கருத்துக்களைத்தெரிவிக்கும்போது வலைஞரை தன்னுடைய எதிரியாகப்பாவிக்கும் போக்கு சில இடங்களில் காணக்கிடைக்கிறது.the persons who feel (true or not-it is their perception) they are suppressed, neglected or treated inequitably will blame the society in general and the government and affluent class in particular. The blogs serve as ventilation for their anger against the society of which they think they are not a part. While some one gives a comment that the argument is fallacious (it is again his /her perception) it is for the blogger to ignore it or delete it. Instead arguing the issue as reply to the comment serves no useful purpose. If both the posting and the comment remain the common man reads both and comes to his own conclusion.
சில வலைத்தளங்களில் உலா வரும்போது தெருக்குழாய் சண்டையை ஒட்டுக்கேட்ட உணர்வு வருகிறது.நான் சொல்லுவது every one has a right to express what he feels and everybody else has a right to agree or disagree or disown the idea. if we can not tolerate criticism then we have to examine ourselves.
ஆடத்தெரியாதவள் மண்டபம் கோணல் என்று சொன்ன கதையாக இருக்கக்கூடாது.
எப்படியோ நானும் தமிழில் ஒரு போஸ்டிங் போட்டுவிட்டேன்!

உறவும்,பிரிவும்.

காதலை எதிர்க்கும் சமூகத்தை எதிர்க்க இயலாதவர்கள் ஏன் காதலிக்கவேண்டும்? தோல்வி உறுதி என்று தெரிந்தும் ஏன் போராடவேண்டும்? அது ஒருவகை சோகம். இயலாமையின் வெளிப்பாடாக நான் எழுதிய கவிதை (1973-ம் வருடம்).

சேற்றிலே செந்தாமரை- அன்புப்
பூக்கின்ற உந்தன் இதயம் .
ஆசையாய் பார்க்கும் பார்வை,
நாக்கினில் ஐஸ் கிரீம் ஆகும்
எரி தழல் கலந்த பார்வை-என்
இதயத்தை தீயில் வாட்டும்.

பறப்பதற்கு பறவைக்குச் சிறகு வேண்டும்
உயிருக்கு உணவாக உறவு வேண்டும்.
உன்னுயிரத்தனதாய்க் கொள்ளும்
உற்றவள் இல்லையென்றால்-வாழ்க்கை
உப்பு சப்பு அற்றதாகும்.

”என்பக்கம் இல்லை யென்றால் - நீ
எதிரியின் பக்கம் தானே!”
ஆதரிக்கப்படாத அன்பு எல்லாம்,
அளவற்ற வெறுப்பாய் மாறும்!


நேற்றுப் பிறந்தவன்,இன்று இருப்பவன்,
நாளை மறைபவன் -இடையில் ஏன் போராட்டம்?

ராகங்கள் இல்லாத பாட்டு இல்லை
சோகங்கள் இல்லாத வாழ்க்கை இல்லை.
உறவுக்கு ஏங்குவது இளமைத்தாகம்-
பிரிவுக்குத் தாங்காது துடித்துப்போகும்.

காதலில் தோற்றுவிட்டால் என்ன ஆகும்?
வாழ்வில்,ஆசைகள்,பாசங்கள் எல்லாம் சாகும்.
கட்டவிழ்ந்த மனம், இலக்கின்றி எங்கோ போகும்.
மீண்டும்,மீண்டும் காதலைத்தேடித் தோற்கும்.

நினைவுகளைப் பங்கிட துணை வேண்டும்-இல்லை
நீள் துயிலில் நிம்மதியாய் ஆழ வேண்டும்.
சுட்டெரிக்கும் தணலில் வேகா உடம்பு-கண்ணீர்
சொட்டிரண்டு பட்டால் வேகும்!

சொல்லாத காதலுக்குத் தோல்வி இல்லை,
பிறவாத கவிதைக்குச் சாவே இல்லை.
மண்ணுலகில் நிறைவேறாக் காதல்
வின்ணுலகில் நிறைவேற வாய்ப்பு உண்டு;
ஏனென்றால் திருமணங்கள் அங்கேதானே
நிச்சயக்கப் படுகின்றன

முன் உரை.

தமிழ் மொழியில் எழுதவேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை இந்த வலைத்தளத்தின் மூலம் நிறைவேறுகிறது.உபயம் keyman. உதவி திருமதி கீதா -தமிழ் வலைஞர்.அவரிடமே வலைத்தளங்களில் தமிழ் தட்டச்சு தெர்யாமலேயே தமிழில் தட்டச்சு செய்வது எப்படி என்று கேட்டு அதன்படி e- kalappai௨ யை இறக்கம் செய்து ஒலிகளுக்கேற்றவாறு தட்டச்சு செய்யக்கற்றுக்கொண்டேன். இத்தளத்தில் ஒன்றிரண்டு கவிதை,கதை,கட்டுரைகள் எழுத எண்ணம்.மற்றப்படி ,செய்தித்தாள்களில் ,தொலைக்காட்சிகளில் வரும் நிகழ்வுகள் என்னை எப்படி பாதிக்கின்றன,அவற்றுக்கு என்னுடைய உணர்ச்சி வெளிப்பாடு பற்றி அவ்வப் பொழுது எழுத உத்தேசம்.
திருமதி கீதா அவர்களுக்கு நன்றி.