Sunday, July 24, 2011

தேவதை – கவிதை

இது தேவதை என்ற இதழுக்கு ஜூன் மாதம் (2011) போட்டிக்ககு அனுப்பி பரிசு பெறாத,பிரசுரம் ஆகாத கவிதை! கொஞ்சம் திருத்தி இருக்கிறேன்.
முன்பு இதைவிட கேவலமாக இருந்தது!

தேவதையே, என் தேவதையே, 

எட்டும் உயரத்தில் என் தேவதையே

.தாயாய், தமக்கையாய்,

தங்கையாய்,சேயாய் காதலியாய், எல்லாமாய்..

புன்சிரிப்பாலெனை மயக்குகிறாய், 

மனப் புண்ணுக்கு நீ மருந்தானாய்

சிரிக்கும்போது தேவதைதான், 

சிடு சிடுத்தால் வேதனைதான்

மனத்தில்பூவாய் உலவுகிறாய், 

இதயத்திலின்பம் தூவுகிறாய்

கனியாய் இனிப்பாய், காயாய் கசப்பாய், 

காரணம் சொல்வாயா?

அன்பாய் இருந்தால், மனைவியும் ஒரு தேவதையே, அன்றேல்

வன்சொல் ஆடும், மாற்றுருவில் வந்த ராட்சசியே!