தேவதையே, என் தேவதையே, எட்டுமுயரத்தில் என் தேவதையே
.தாயாய், தமக்கையாய்,தங்கையாய்,சேயாய் காதலியாய், எல்லாமாய்..
புன்சிரிப்பாலெனை மயக்குகிறாய், மனப் புண்ணுக்குநீ மருந்தாவாய்
சிரிக்கும்போது தேவதைதான், சிரித்து என்னை வதைத்திடுவாய்
மனத்தில்பூவாய் உலவுகிறாய், இதயத்திலின்பம் தூவுகிறாய்
கனியாய் இனிப்பாய், காயாய் கசப்பாய், காரணம் சொல்வாயா?
அன்பாய் இருந்தால், மனைவியும் ஒரு தேவதையே, அன்றேல்
வன்சொல் ஆடும், மாற்றுருவில் வந்த ராட்சசியே!
