Showing posts with label சரஸ்வதி.. Show all posts
Showing posts with label சரஸ்வதி.. Show all posts

Sunday, March 2, 2025

ஆயுரமாயிரம்!

 

எழுதியவர் : என் தங்கை கோசரஸ்வதிகடலூர்.

அரும்புகள் ஆயிரமாம்,

அரும்புகள் செய்யும்

குறும்புகள் ஆயிரமாம்.

குழந்தைகள் ஆயிரமாம்,

குழந்தைகள் போடும்

கும்மாளம் ஆயிரமாம்.

 

கண்கள் ஆயிரமாம்,

கண்கள் காணும்

காட்சிகள் ஆயிரமாம்.

பெண்கள் ஆயிரமாம்,

பெண்கள் பாடும்,

பாட்டுகள் ஆயிரமாம்.

 

ஆண்கள் ஆயிரமாம்,

ஆண்கள் ஆடும்

ஆட்டங்கள் ஆயிரமாம்.

மனிதர்கள் ஆயிரமாம்,

மனிதர்கள் காட்டும்

வண்ணங்கள் ஆயிரமாம்!