Showing posts with label சலுகை. Show all posts
Showing posts with label சலுகை. Show all posts

Wednesday, April 10, 2019

கவிதையை ரசிக்கிறேன்!


கவிதையை ரசிக்கிறேன்,
கவிஞனை வியக்கிறேன்;
குளிர் அறையில் குடியிருப்பான்,
வறுமையை எதிர்த்து போராடுவான்.
பல கோடி சொத்து, சொகுசு வாழ்வு;
வறியோர்க்கு கண்ணீர் வடிப்பான்.
கள்ளுண்னாமை போற்றுவான்;
பொழுது சாய்ந்தால், போதை தேடுவான்!

நியாயம், நீதி, நேர்மை, அவன் பாட்டிலும், ஏட்டிலும்
அதிகாரத்தில் சலுகை,பேச்சிலே பொய், நல்லவன் போல நடிப்பு
பெண்ணின் பெருமை பேசுவான், மயங்கும் பெண்ணைத் தடவுவான்.
ஆளுவோரை போற்றுவான், அரசியல் எதிரியை தூற்றுவான்

தமிழ் மொழி அவனுக்கு கவசம், கவிதை அவனது ஆயுதம்;
அதனால், கவிதையை ரசிக்கிறேன், கவிஞனை வெறுக்கிறேன்!