Thursday, July 2, 2009

1973 ல் எழுதிய கவிதைகள் 3

                              நான் என்னுடைய நண்பர் ஒருவருக்கு எழுதிய கவிதை வடிவிலான கடிதத்தில் மற்றொரு நண்பர் திரு ஷண்முகத்தை நலன் விசாரித்திருந்தேன். அதைப்படித்துவிட்டு அவர் அது என்னுடைய கவிதையா அல்லது வேறு கவிஞர் எழுதியதை நான் எடுத்தாண்டேனா என்று ஐயம் எழுப்பியிருந்தார். 

                              அதற்குப்பதிலாக நான் எழுதியது. Dear boss, I may have a few weaknesses, but plagiarism is not one of them. Just to prove my point I write some nonsense which no one else will claim as his own. 

 அன்பு ஷண்முகமே,ஆசைத் திருமுகமே,
 முறையாகத் தமிழைநான் படிக்கவில்லை, 
முழுதாக எதையும் நான் கற்கவில்லை.
 குறைகாண இயலாத குணக் குன்றில்லை
 நான் எழுதும் கவிதை,காவிய மில்லை. 
 என் பாடல் தவறென்றால், பொறுத்திருப்பேன், 
என் தகுதி குறைவென்றால்,சிரித்திருப்பேன். 
இன்னொருவன் என் பாடல் தனது என்றால்
எப்படியும் மறுத்துரைப்பேன். 
உமக்காக ஒரு கடிதம், கவிதை(?) வடிவில்.

   காதல், காதல் 

யானையைத் தடவிப் பார்த்து, 
யானையைப் பற்றிச் சொன்ன 
நண்பர்கள் கதையைப் போல- 
பொதுவாய்க் காதலைப் பற்றிச் 
சொல்லும் யார்க்கும், 
பார்வைக் கோணத்தில் மாற்றம்;
எனவே , ஒரு காதல் போல 
இன்னொன்று இல்லை; 
காதலன் வேறு,வேறு; 
காதலி வேறு,வேறு 
தூயவர் துய்க்கும் காதல்வேறு!

காதலென் றறியாது காதலில் வீழ்வோர், 
காதலில் மூழ்கிக்கொண்டு நட்பென்போர். 
உடல் தொடாக் காதலாக, 
உள்ளத்தில் பதிவார், சிலர். 
உணர்ச்சிக்கு வடிகாலாக, 
உடம்பால் இணைவார் பலர். 
என் காதல் வான் அளவு உயர்ந்த காதல் 
ஊனிலே உறைந்த காதல். 
நான் கொண்ட காதல் பற்றி 
சொல்ல இது நேரம் அல்ல;
இருந்தாலும், சில வரிகள்.

பள்ளிப் பருவத்தில் பெண்ணொரு புதிர், 
கல்லூரிக் காலத்தில் கொஞ்சம் வெளிச்சம். 
தெரிந்து கொள்ளும் ஆர்வமன்றி வேறல்ல. 
ஏதேதோ எண்ணங்கள், ஏக்கங்கள், 
எதிர்பார்ப்புக்கள், எஞ்ஞான்றும் உறுத்தல்கள், 
இறுதியில் ஏமாற்றங்கள்.

ப்ளாடோனிக் லவ் என்று போனதினால்,
இன்று ஃபிரண்டுகள் மட்டும் மிச்சம் ! 
ப்ராக்டிகல் லவ் என்று போயிருந்தால், 
ப்ரேசியர் அளவேனும் தெரிந்திருக்கும்!
 முட்டி நின்று பழகவரும் பெண்மை – 
அதை எட்டி நின்று பார்த்ததுதான் மடமை; 
தொட்டுப் பார்க்கவில்லை; பார்த் திருந்தால் 
கிட்டும் சுகமெல்லம் நினைவில் நிற்கும். 

எப்படியும் இக் கவிதை
எனதென்று ஒப்புக்கொள்வீர்;அன்றேல், 
இன்னொன்று 
எழுது வேன் நான்!

4 comments:

Shan. said...

superb!!

Iyappan Krishnan said...

கலக்கறீங்க

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Rajasubramanian S said...

நன்றி திரு ஐயப்பன். நான் என்னுடைய வலைப்பக்கம் அடிக்கடி வராததால் பதிலுரை பகலவில்லை.