Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Sunday, March 5, 2017

நீயும் நானும்.

உன்னைத்தேடும் கண்களுக்கு உறக்கமில்லை
உன்னைப் பார்த்தபின்னர் நான் உறங்கவில்லை.
பார்த்தால் பசி தீருமென்று நானிருக்க
பாராமலே நீ போவதென்ன?

சந்தனமா உன் தேகம்எனில்
கல்லோ இரும்போஉன் இதயம்
உன்னிரு வழ வழ  கன்னங்கள்,
பார்க்கையில் என்னுள் எண்ணங்கள்.

வாய்திறந்து பேசுஅன்றேல் உன்
விழி அசைவு போதும் எனக்கு
காலம் முழுதும் காத்திருப்பேன்
கரம்பிடிக்க நீ சரியென்றால்

Thursday, July 2, 2009

1973 ல் எழுதிய கவிதைகள் 3

                              நான் என்னுடைய நண்பர் ஒருவருக்கு எழுதிய கவிதை வடிவிலான கடிதத்தில் மற்றொரு நண்பர் திரு ஷண்முகத்தை நலன் விசாரித்திருந்தேன். அதைப்படித்துவிட்டு அவர் அது என்னுடைய கவிதையா அல்லது வேறு கவிஞர் எழுதியதை நான் எடுத்தாண்டேனா என்று ஐயம் எழுப்பியிருந்தார். 

                              அதற்குப்பதிலாக நான் எழுதியது. Dear boss, I may have a few weaknesses, but plagiarism is not one of them. Just to prove my point I write some nonsense which no one else will claim as his own. 

 அன்பு ஷண்முகமே,ஆசைத் திருமுகமே,
 முறையாகத் தமிழைநான் படிக்கவில்லை, 
முழுதாக எதையும் நான் கற்கவில்லை.
 குறைகாண இயலாத குணக் குன்றில்லை
 நான் எழுதும் கவிதை,காவிய மில்லை. 
 என் பாடல் தவறென்றால், பொறுத்திருப்பேன், 
என் தகுதி குறைவென்றால்,சிரித்திருப்பேன். 
இன்னொருவன் என் பாடல் தனது என்றால்
எப்படியும் மறுத்துரைப்பேன். 
உமக்காக ஒரு கடிதம், கவிதை(?) வடிவில்.

   காதல், காதல் 

யானையைத் தடவிப் பார்த்து, 
யானையைப் பற்றிச் சொன்ன 
நண்பர்கள் கதையைப் போல- 
பொதுவாய்க் காதலைப் பற்றிச் 
சொல்லும் யார்க்கும், 
பார்வைக் கோணத்தில் மாற்றம்;
எனவே , ஒரு காதல் போல 
இன்னொன்று இல்லை; 
காதலன் வேறு,வேறு; 
காதலி வேறு,வேறு 
தூயவர் துய்க்கும் காதல்வேறு!

காதலென் றறியாது காதலில் வீழ்வோர், 
காதலில் மூழ்கிக்கொண்டு நட்பென்போர். 
உடல் தொடாக் காதலாக, 
உள்ளத்தில் பதிவார், சிலர். 
உணர்ச்சிக்கு வடிகாலாக, 
உடம்பால் இணைவார் பலர். 
என் காதல் வான் அளவு உயர்ந்த காதல் 
ஊனிலே உறைந்த காதல். 
நான் கொண்ட காதல் பற்றி 
சொல்ல இது நேரம் அல்ல;
இருந்தாலும், சில வரிகள்.

பள்ளிப் பருவத்தில் பெண்ணொரு புதிர், 
கல்லூரிக் காலத்தில் கொஞ்சம் வெளிச்சம். 
தெரிந்து கொள்ளும் ஆர்வமன்றி வேறல்ல. 
ஏதேதோ எண்ணங்கள், ஏக்கங்கள், 
எதிர்பார்ப்புக்கள், எஞ்ஞான்றும் உறுத்தல்கள், 
இறுதியில் ஏமாற்றங்கள்.

ப்ளாடோனிக் லவ் என்று போனதினால்,
இன்று ஃபிரண்டுகள் மட்டும் மிச்சம் ! 
ப்ராக்டிகல் லவ் என்று போயிருந்தால், 
ப்ரேசியர் அளவேனும் தெரிந்திருக்கும்!
 முட்டி நின்று பழகவரும் பெண்மை – 
அதை எட்டி நின்று பார்த்ததுதான் மடமை; 
தொட்டுப் பார்க்கவில்லை; பார்த் திருந்தால் 
கிட்டும் சுகமெல்லம் நினைவில் நிற்கும். 

எப்படியும் இக் கவிதை
எனதென்று ஒப்புக்கொள்வீர்;அன்றேல், 
இன்னொன்று 
எழுது வேன் நான்!

Friday, February 13, 2009

கலைந்த கனவுகள்.

(1973-ம் ஆண்டு பிற்பகுதியில் நண்பர் ஒருவர் எழுதிய கடிதத்துக்கு பதிலாக அனுப்பியது. அவர் தன்னுடன் படித்த பெண்ணைக் காதலிப்பதாக நினைத்தார். அவளை மணக்க விரும்பி என் கருத்தையும் கேட்டார். நான் அவருக்கு அனுப்பிய பதில் இது. கவிதையா இல்லையா என்று படிப்பவர்கள்தான் சொல்லவேண்டும்.) 

ஆருயிர் நண்பனுக்கு, 

அறிந்தது போல் இருந்தாலும் அறியாப்பருவம். 
பாலியல் அறிந்துகொள்ளத் துடிக்கும் பருவம். 
அனுபவம் எனக்குண்டென்று கேட்கிறாயோ?
நான் சூடு கண்ட பூனையென்று அறிவாய் தானே? 
தண்ணிலவை மேகங்கள் மறைக்கப்பார்க்கும் 
நட்புணர்வை மோகங்கள் கொச்சையாக்கும்; 
ஆனாலும் இவையெல்லாம் மறைந்து போகும் 
அறிவென்னும் ஒளி வந்தால் தெளிவுண்டாகும். 
செம்மண்ணில் பெய்கின்ற மழையின் ஈரம் 
செந்நிறத்தைப் பெறுவதுவோ தெரிந்த சேதி;
நன் மனத்தில் பிறக்கின்ற அன்பு தாகம்
நன்செய்யில் பயிர்போல நன்றாய் வளரும். 
 உள்ளத்தில் உறுதி மட்டும் இருந்துவிட்டால் 
உலகெல்லாம் காலுக்கு கீழே காணும். 
துடிக்கின்ற இதயத்தில் உண்மை அன்பு,
அது அழிகின்ற உலகத்தில் அழியாப் பண்பு. 
துள்ளும் இளமையெல்லாம் சிலநாள் பொழுது.
நெஞ்சை அள்ளும் அழகெல்லாம் தேயும்பொழுது. 
ஈன்றவர்க்கு பெற்றகடன் தீர்க்கும் முன்னே-
வேறு பெண்ணைத் தேடுவது சரியா நண்பா ? 
ஓடுகின்ற ஆறெல்லாம் கடலைச்சேரும் – பெண்ணை 
நாடுகின்ற ஆசையெல்லாம் உடலைச்சாரும்.
காதல் பாடுகின்ற பெண்ணுக்கு காட்டும் பரிவில்- பாதியேனும்,
பாடு படுகின்ற பெற்றோர்க்கு உண்டா,இலையா? 
கடல் தோன்றிப்பாய்கின்ற நதியும் உண்டு- 
அது கண் தோன்றிப்பாய்கின்ற கண்ணீர் வெள்ளம். 
கடலவு கண்களிலே வீழ்ந்தபின்னே கரைசேர ஏதுவழி? எண்ணிப்பார்ப்பாய். காதலுக்கு எதிரி நான் இல்லை,காதலிக்கு மட்டும் தான்! 
என் காதல் தோற்றதனால் எனக்குப்பாடம்.
நீ பாடம் கற்பதற்கு நல்ல வாய்ப்பு.
பெண்பாவம் எனக்கெதற்கு? 
மேலும் நீ கற்க என் வாழ்த்துக்கள்!